இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ள முதல் கனேடிய மாகாணம்
கனேடிய மாகாணமொன்று இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளது.
கனடாவின் மனிடோபா மாகாண முதல்வர் வாப் கினூ (Wab Kinew) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் AI Chatbots-ஐ பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.
இது கனடாவில் முதல் முறையாக அமுல்படுத்தப்படும் சட்டமாகும்.
வாப் கினூ கூறியதாவது, சமூக ஊடகங்கள் “இன்ஃபினிட் ஸ்க்ரோல்” மூலம் பயனர்களை அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இளைஞர்களுக்கு மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

“சில ‘லைக்ஸ்’ மற்றும் ‘என்கேஜ்மெண்ட்’ பெயரில் குழந்தைகளை பாதிக்கின்றனர். இதன் மூலம் சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிக்கின்றன” என அவர் விமர்சித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு சமூக ஊடக கணக்குகளைத் தடை செய்த சட்டத்தைப் போலவே இந்தத் திட்டம் அமையும்.
அங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் சுமார் 5 மில்லியன் இளைஞர்களின் கணக்குகள் நீக்கப்பட்டன.
சமூக ஊடகங்களுடன் AI Chatbots-ஐயும் மனிடோபா அரசு தடை செய்யும் முயற்சியில் உள்ளது. இதனால், இளைஞர்களின் மனநல பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், கனடாவின் பிற மாகாணங்களும், பிரான்ஸ், இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளும் இளைஞர்களுக்கான சமூக ஊடக வயது வரம்புகளை பரிசீலித்து வருகின்றன. மனிடோபா வின் இந்த முடிவு, உலகளாவிய விவாதத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Manitoba social media ban youth, AI chatbot ban Canada, Wab Kinew announcement, Canada youth online safety law, Manitoba first in Canada ban #Manitoba #SocialMediaBan #AIChatbots #YouthSafety #CanadaNews #DigitalPolicy