தினமும் 2 பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
என்னென்ன நன்மைகள்
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் பாதாம், முந்திரி போன்ற டிரை ப்ரூட்களை சாப்பிட வேண்டும். அந்தவகையில் நாம் தினமும் ஊறவைத்த பேரீச்சம்பழம் சாப்பிட்டால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.
பேரீச்சம்பழத்தில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, தாமிரம், பாஸ்பரஸ், துத்தநாகம், பி1, பி6, பி9, பி5, பி2, வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளிட்ட பல Antioxidants உள்ளது. இதனால், பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
செரிமானம்
தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல் குறையும். அதோடு, மலம் கழிக்க எளிதாக இருக்கும்.
மேலும், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை குறைத்து வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும்.
நினைவாற்றல்
இரண்டு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் நரம்புகளில் வீக்கம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும், உடல் எடை அதிகரிக்க உதவும். அதோடு, ஆரோக்கியமான கொழுப்பும் அதிகரிக்கும்.
ரத்த சோகை
பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையை தடுக்க உதவும். சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடலின் ஆகிசிஜன் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
கொலஸ்ட்ரால்
தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவும். மேலும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
கீல்வாதம்
பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் கால்சியத்தின் அளவு இரட்டிப்பாகும். இதனால், கீல்வாதம் மற்றும் எலும்பு அடர்த்தி குறைபாடு போன்ற பிரச்சினைகள் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |