காணாமல் போன அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்! சடலமாக மீட்கப்பட்ட 5 வீரர்கள்
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் பலியாகினர்.
கடற்படை வீரர்கள்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு அருகில் உள்ள Creech விமானப்படை தளத்தில் இருந்து San Diegoவில் உள்ள Marine Corps Air Station Miramar-க்கு, கடற்படையினர் பயிற்சிக்காக ஹெலிகாப்டரில் சென்றனர்.
அப்போது ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டபோது கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில்,காணாமல் போன ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ஐந்து கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
@Lance Cpl.Jennifer Sanchez/US Marine Corps/file
மேஜர் ஜெனரல் அறிக்கை
இச்சம்பவம் குறித்து Marine விமானப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் Michael J. Borgschulte வெளியிட்ட அறிக்கையில், 'இந்த விமானிகள் மற்றும் பணியாளர்கள் தங்களை விட பெரிய சேவையை வழங்கினர் மற்றும் நாங்கள் அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் கடமை மற்றும் தன்னலமற்ற சேவைக்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கடற்படையினரின் அடையாளங்கள் 24 மணிநேரத்திற்கு பின் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
US Navy
ஜோ பைடன் இரங்கல்
வியாழக்கிழமை காலை ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், 'என்ன நடந்தது என்பதை பாதுகாப்புத் துறை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதால், எங்கள் தேசத்தின் 5 சிறந்த போர் வீரர்களின் இழப்பை நாங்கள் வருத்தப்படுகையில், அவர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் படை மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்தார்.
அதேபோல் முதல் பெண்மணியான ஜில் பைடனும் இந்த செய்தியால் இதயம் உடைந்ததாக குறிப்பிட்டார்.
Saul Loeb/AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |