பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு... வீட்டுக்குள் வயதான தாயார் கண்ட காட்சி
பிரித்தானியாவில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட திருமணமான தம்பதியின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் க்ளோசெஸ்டர்ஷைர் பகுதியில் உள்ள சைரன்செஸ்டரில் மே 10ம் திகதி திங்கள்கிழமை மைக்கேல் மற்றும் மரியா கிரீன்வே தம்பதி சடலமாக மீட்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கார்பன் மோனாக்சைடு காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
சம்பவத்திற்கு முந்தைய நாள் மரியாவின் 9 வயது மகன் பாட்டியின் குடியிருப்பில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த நாள் 10ம் திகதி, அங்கிருந்தே பாடசாலைக்கும் சென்றுள்ளான்.
இந்த நிலையில் பாடசாலையில் இருந்து சிறுவனின் பாட்டியாருக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில், சிறுவனை அழைத்துச் செல்ல மரியா இன்னும் பாடசாலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த மரியாவின் தாயார், உடனடியாக மகளின் குடியிருப்புக்கு விரைந்துள்ளார். மட்டுமின்றி, அப்பகுதி மக்களின் உதவியுடன், பூட்டப்பட்டிருந்த முன் வாசலை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கே, படுக்கையறையில் மகளும் மருமகனும் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து அவசர உதவிக்குழுவினருக்கும் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிசார் இந்த விவகாரத்தை விவரிக்க முடியாத வழக்காகவே அடையாளப்படுத்தியுள்ளனர். மேலும், கார்பன் மோனாக்சைடு வாயு சுவாசித்ததாலையே மரணம் நிகழ்ந்துள்ளது என உடற்கூராய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, உறவினர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.