மாமியாருக்கு பயந்து கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறிய மருமகள்! ஸ்கேனில் உண்மை தெரிந்த பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரிடம் பொய்யாக கூறி நம்பவைத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கனிமொழி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லை.
இது தொடர்பாக கனிமொழியை அவர் மாமியார் திட்டி தீர்த்து வந்துள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த கனிமொழி தான் கர்ப்பமாக இருப்பதாக கணவனின் குடும்பத்தினரை நம்பவைத்துள்ளார்.
ஆனால் ரஞ்சித்குமாருக்கு சந்தேகம் வந்ததால் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இல்லை என தெரியவந்தது. இதனால் அவரும் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர்.
குடும்பத்தாருக்கு உண்மை தெரிந்துவிட்டதே என்ற பயத்தில் இருந்த கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.