ஜூன் மாதம் முதல் மாருதி சுசூகி கார் விலை உயர்வு
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசூகி, ஜூன் 1, 2026 முதல் தனது அனைத்து மொடல்களுக்கும் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மொடல் அடிப்படையில், அதிகபட்சம் ரூ.30,000 வரை விலை உயர்வு அமுல்படுத்தப்படும்.
உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்தல் மற்றும் பெருகும் பணவீக்கம் காரணமாக விலை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவன தெரிவித்துள்ளது.
இதுவரை உள்துறை செயல்திறன் மேம்பாட்டின் மூலம் செலவுகளை சமாளித்து வந்ததாக கூறும் நிறுவனம், தற்போது ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் பக்கம் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.

மாருதி சுசூகி, ஜனவரி 2026-இல் விலை உயர்த்த திட்டமிட்டிருந்தாலும், சிறிய ரக கார் விற்பனை அதிகரித்ததால் அப்போது அதை ஒத்திவைத்தது.
முதன்முதலில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, குறைந்த தாக்கம் கொண்ட விலை உயர்வை மேற்கொண்டுள்ளதாக, நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு மூத்த அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறியுள்ளார்.
மொடல் வாரியாக விலை உயர்வு விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால், ரூ.30,000-க்கு மேல் உயர்வு இருக்காது என நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதற்கு முன், MG Motor, Tata Motors ஏப்ரல் மாதத்தில் விலை உயர்த்தியிருந்தன. Hyundai மே மாதத்தில் விலை உயர்த்தியது. BYD ஜூலை 2026-இல் 2 சதவீதம் வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |