ஜேர்மனி மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்துவருகிறது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
புதிய Omicron வகை கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஜேர்மனி 'பாரிய ஐந்தாவது அலை'யை எதிர்கொண்டுவருவதாக ஜேர்மன் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று, ஹனோவரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் (Karl Lauterbach), "இந்த வடிவத்தில் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், Omicron மாறுபாடு மற்ற வகைகளை விட லேசானதாக இருக்கலாம். இது இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு இறப்ப எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்கலாம். ஆனால், இந்த வைரஸின் வளர்ச்சி அடைவதால், கடினமான காலத்தை "தவிர்க்க முடியாதது" என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும், கிறிஸ்துமஸ் விடுமுறை நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைக் காலத்தில் பயணம் செய்பவர்களை அடிக்கடி பரிசோதிக்குமாறு லாட்டர்பாக் வேண்டுகோள் விடுத்தார்.
ஜேர்மனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசாங்கம் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளது.
தடுப்பூசி போடப்படாத நபர்களை உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் நுழகிய அனுபதி மறுக்கப்படுகிறது.
Omicron வைரஸுக்காகவே பிரத்தியேகமாக Pfizer மற்றும் BioNTech நிறுவனங்களால் உருவாக்கப்படும் தடுப்பூசிகளில் 80 மில்லியன் தடுப்பூசிகளை அரசாங்கம் முன்கூட்டியே ஆர்டர் செய்துள்ளது.