இங்கிலாந்தில் சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்
இங்கிலாந்தில் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவளது தாயே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்
இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, திங்கட்கிழமை இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
Image: unknown
பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள். மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், Shay Kang பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
வெளியாகியுள்ள திடுக் தகவல்
இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
Image: PA Wire
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண், Shay Kangஇன் தாயாகிய ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (Jaskirat Kaur, also known as Jasmine Kang, 33) என தெரியவந்துள்ளது. அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்ற தாயே மகளை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து கடும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
ஜாஸ்மின், இன்று Wolverhampton மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |