அடையாளம் தெரியாமல் சாம்பலாகிப் போன தீவு... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: நொறுங்கவைக்கும் காட்சிகள்
அமெரிக்காவின் ஹவாய் தீவில் மௌய் காட்டுத்தீ காரணமாக 1,700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 53-ஐ எட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1,000 பேர்கள் மாயம்
ஹவாய் தீவில் செவ்வாய்க்கிழமை காலை மெளய் காட்டுத் தீ ஏற்பட்டது. டோரா சூறாவளி பலத்த காற்றை கிளப்பியதை அடுத்து பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. மௌய் மாவட்ட அதிகாரிகள் தரப்பு புதன்கிழமை தெரிவிக்கையில், இதுவரை காட்டுத்தீக்கு 36 பேர்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
@AP
ஆனால் வியாழக்கிழமை மேலும் 17 பேர்கள் மரணமடைந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கவர்னர் ஜோஷ் கிரீன் தெரிவிக்கையில், மின்சாரம், இணையம், தொலைத்திடர்பு என எதுவும் செயல்படவில்லை எனவும், சுமார் 1,000 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் அனைவரும் மரணமடைந்துள்ளதாக கூறவில்லை, ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை, அவர்களுக்கு என்ன ஆனது என எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
@AFP
சில வாகனங்களில் சடலங்களும்
மௌய் காட்டுத்தீ காரணமாக 1,700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஹவாய் வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக இது இருக்கலாம் என்றே கவர்னர் ஜோஷ் கிரீன் தெரிவித்துள்ளார்.
மேலும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள கிரீன், நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, Lahaina பகுதி மொத்தமாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AP
நெருப்பில் சிக்கிய வாகனங்கள் சாலையெங்கும் காணப்படுவதாகவும், சில வாகனங்களில் சடலங்களும் காணப்படுவதாக கூறுகின்றனர். பலர் காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க, கடலில் குதித்துள்ளனர்.
குறைந்தது 2,100 பேர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர். புதன்கிழமை மட்டும் 11,000 சுற்றுலாப்பயணிகள் தீவை விட்டு வெளியேறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |