ஹரி-மேகனை விட அதிக நிதி திரட்டி அசத்திய 11 வயது சிறுவன்!
பிரித்தானியாவில் 11 வயது சிறுவன் உருவாக்கிய பூனை சரணாலயம் ஒன்று, ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் தொண்டு நிறுவனத்தை விட அதிக நிதியை திரட்டி அசத்தியுள்ளது.
தெற்கு வேல்ஸில் உள்ள Port Talbot அருகே உள்ள Ty-Nant பூனை சரணாலயம் 2020-ஆம் ஆண்டில் மேகன் மார்க்கலின் தொண்டு நிறுவனத்தை விட அதிகப் பணத்தை திரட்டியுள்ளது.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, இலாப நோக்கற்ற இந்த அமைப்பு பூனைகளுக்கு அன்பான வீடுகளைக் கண்டறிய உதவுகிறது.
11 வயதான மேக்ஸ் வூசி (Max Woosey) போன்ற நிதி திரட்டுபவர்கள் மற்றும் பரோபகாரர்களால் இந்த அமைப்பு நடத்தப்படுகிறது.
அறிக்கைகளின்படி, மேக்ஸ் நிதி திரட்டுவதற்காக தனது வீட்டின் பின் தோட்டத்தில் ஒரு கூடாரத்தில் தூங்குவது வழக்கமாக மாற்றினார். கோவிட் பொதுமுடக்கம் நிதி தொகையை குறைக்கும் என்று மேக்ஸ் நினைத்துள்ளார். ஆனால், மேகன் மார்க்கலின் தொண்டு நிறுவனத்தை விட மேக்ஸ் அதிக நிதி திரட்டினார்.
அவரைப் பொறுத்தவரை, கோவிட் லாக்டவுன் விரும்பிய பலனைத் தராது நினைத்ததால் இந்த டென்ட் வாழ்க்கையை அவர் நீண்ட காலமாகச் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், நினைத்ததைவிட நிதி வரத்தொடங்கவே 11 வயதான அவர் தனது நிதி திரட்டும் திட்டத்தை இன்னும் தொடர்வதாக கூறினார்.
அவர் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி, அவரது டென்ட் வாழ்க்கை முயற்சி மட்டும் 107,000 பவுண்டுகள் திரட்டியுள்ளது. 2022-ல், அவரது அமைப்பு 650,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக திரட்டியுள்ளது.
மறுபுறம், பெவர்லி ஹில்ஸை அடிப்படையாகக் கொண்ட பொது அமைப்பான இளவரசர் ஹாரி, சசெக்ஸ் டியூக் மற்றும் சசெக்ஸ் டச்சஸ் மேகன் ஆகியோரால் 2020 இல் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனம் ஆர்க்கிவெல் இன்க் 2020-ல் 11,538 பவுண்டுகள் மட்டுமே திரட்டியுள்ளது.
மேகன் தனது அரச அந்தஸ்தை கைவிட்டதால், அவரது தொண்டு நிறுவனம் இந்த நிதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டது.
Rachel Meghan Markle என்ற பெயரில் பிறந்த மேகன், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அமெரிக்க உறுப்பினராகவும் நடிகையாகவும் பெரும் புகழ் பெற்றவர். அவர் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனான இளவரசர் ஹாரியை வின்ட்ஸரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் மே 2018-ல் திருமணம் செய்து கொண்டார்.
2020-ஆம் ஆண்டில், தம்பதியினர் அரச பணிகளை விட்டுவிட்டு வட அமெரிக்காவிற்குச் செல்வதாக அறிவித்தனர். அவர்கள் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் குடியேறினர்.