பிரித்தானியாவில் வரும் 17-ஆம் திகதி முதல் இதற்கெல்லாம் தடை நீக்கப்படும்! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொள்ள வரும் 17-ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படுவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் உள்ளன. இருப்பினும் பிரித்தானியாவில் இப்போது பாதி மக்கள் முதல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழப்புகள் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக, அங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் படி வரும் 17-ஆம் திகதி முதல், இதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும், இதை நாளைய செய்தியாளர்கள் சந்திப்பில் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மே 17 முதல் 30 பேர் வரை இறுதிச் சடங்குகள் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவர். ஆனால் திருமணங்களுக்கான விதிகளில் எந்த ஒரு மாற்றமும் வராது.
ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளுக்கு மேல், உள்ளவர்கள் சந்திக்க கூடாது. அதாவது ஆறு பேர் மட்டுமே சந்திக்கப்படும் விதி அமுலில் இருக்கும். விடுதி மற்றும் உணவங்களில் வெளியில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
உட்புற உடற்பயிற்சி வகுப்புகள், அருங்காட்சியகங்கள், சினிமாக்கள் மற்றும் உட்புற குழந்தைகளின் விளையாட்டுப் பகுதிகள் மீண்டும் திறக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட சில பெரிய உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படும்.
இறுதியாக, வரும் 17-ஆம் திகதிக்கு பிறகு சில இடங்களுக்கு வெளிநாடுகளில் விடுமுறைகள் அனுமதிக்கப்படும் என்று நம்பபடுகிறது.