அது நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்! கணவர் இறப்பிற்கு பின் நடிகை மீனா எடுத்த முக்கிய முடிவு
ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது - மீனா
உறுப்பு தனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதால், எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன் என மீனா பதிவிட்டிருந்தார்
நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடுமையான நுரையீரல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சூழலில் காத்திருந்தார்.
மூன்று மாதத்திற்கும் மேலாக காத்திருந்ததால் வித்யாசாகரின் இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சூன் மாதம் அவர் மரணமடைந்தார். தனது கணவரின் மரணத்திற்கு பிறகு வீட்டிலேயே முடங்கி கிடந்த மீனா, சமீபத்தில் திரையுலக தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மீனா, தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். மேலும், ஏற்கனவே அவர் பதிவிட்ட உருக்கமான பதிவினை குறிப்பிட்டுள்ளார்.
அதில் தனது கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன் வந்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருக்கும் என தெரிவித்திருந்தார்.