பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர்

Tamil nadu A. G. Perarivalan
By Raju May 25, 2022 07:35 AM GMT
Report

பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த அரசு, தவறே செய்யாத தனது தந்தையை சிறையிலேயே வைத்து விட்டதாக வீரப்பனின் அண்ணன் மகள் வேதனை தெரிவித்துள்ளார்.

சந்தன மரக்கடத்தல், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் என தமிழகத்தை பரபரப்பாக்கியவர் வீரப்பன். இவருக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கூறப்படும் மீசை மாதையன், 1987ஆம் ஆண்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் வீரப்பனின் அண்ணன் ஆவார்.

அதனைத் தொடர்ந்து, தனது சகோதரரை கைது செய்த வனச்சரகர் சிதம்பரம் என்பவரை வீரப்பன் சுட்டுக்கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பில், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக 1996ஆம் ஆண்டு மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாதையன் மாற்றப்பட்டார்.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

அதன் பின்னர் இருதய கோளாறு, சர்க்கரை நோய் மற்றும் வயது மூப்பு என அவதிப்பட்டு வந்த மாதையன், கடந்த 1ஆம் திகதி நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77. வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு மாதையனை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் அவரது வாழ்க்கை சிறையிலேயே முடிந்து விட்டது.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

இந்த நிலையில் மாதையனின் மகள் ஜெயம்மாள் அளித்துள்ள பேட்டியில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்த அரசு, தவறே செய்யாத எனது தந்தையை 36 ஆண்டுகாலம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளது. கடைசிவரை எங்களோடு அவர் வராமலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இது எங்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது' என தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனுக்கு விடுதலை, தவறே செய்யாத என் தந்தைக்கு சிறை! வீரப்பனின் சகோதரர் மகள் கண்ணீர் | Meesai Madhaiyan Daughter Said About Perarivalan

மாதையனின் இறுதி சடங்குக்கான வேலைகள் மேட்டூர் அணை கருமலைக்கூடல் பகுதியில் உள்ள அவரது மகள் ஜெயம்மாள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. அவரின் உடல் மேட்டூரை அடுத்த மூலக்காடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மகன் மணி மற்றும் அவரது சகோதரர் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்திலேயே இவரையும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US