இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு முன்பே இளவரசி கேட்டை கதறி அழவைத்த மேகன்
இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு, முன்பே, மேகன், இளவரசி கேட்டை கதறி அழவைத்ததாக தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில், ராஜ குடும்பத்தை கிழித்துத் தொங்கவிட்டதை உலகமே வேடிக்கை பார்த்தது.
அந்த பேட்டியின்போது, இளவரசி கேட் தன்னை அழவைத்ததாக தெரிவித்திருந்தார் மேகன்.
ஆனால், அந்த செய்தி உண்மையில்லை, மேகன்தான் இளவரசி கேட்டை கதறி அழவைத்தார் என்கிறார் தொலைக்காட்சி தொகுப்பாளினியும், இளவரசர் சார்லஸின் மனைவியான கமீலாவின் குடும்ப நண்பருமான Kirstie Allsopp என்ற பெண்.
ராஜ அரண்மனை ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக மேகன் நடந்துகொண்டது தொடர்பாக ஒரு வாக்குவாதம் ஏற்பட, அப்போதுதான் கோபமடைந்த கேட் கதறி அழுதார் என்று கூறியுள்ளார் Allsopp.
பொதுவாக கேட் இதுபோல் நிதானம் இழப்பதில்லை, கோபமடைவதில்லை என்று கூறும் Allsopp, அன்று அரண்மனை ஊழியர்களிடம் மேகன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதால்தான், இளவரசி கேட் கோபமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேகன் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.