இளவரசர் ஹரி மற்றும் மகன் ஆர்ச்சியின் பிணைப்பை புத்தகமாக வெளியிடும் மேகன் மார்க்கல்!
பிரித்தானிய இளவரசியான மேகன் மார்க்கல் குழந்தைகளுக்கான தனது முதல் புத்தகத்தை வெளியிட உள்ளார்.
'தி பெஞ்ச்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த குழந்தைகளுக்கான புத்தகம், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான “சிறப்பு பிணைப்பை” பற்றியது என மேகன் மார்க்கல் கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த புத்தகத்தை அவர் தனது கணவரனான பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவர்களுடைய மகன் ஆர்ச்சி இருவரையும் பார்த்து ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
[9V2A1K ]
மார்க்கலின் இந்த முதல் புத்தகம் 'The Bench' ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படள்ளது.
இந்த புத்தகத்தை புகழ்பெற்ற அமெரிக்க இல்லஸ்ட்ரேட்டர் கிறிஸ்டியன் ராபின்சன் விளக்குகிறார். மேலும் இதன் ஆடியோபுக் பதிப்பை மார்க்கல் விவரிக்கிறார்.
இந்த புத்தகம் பலதரப்பட்ட தந்தையர் மற்றும் மகன்களின் உறவையும், அவர்கள் பகிர்ந்து கொள்ளும் தருணங்களையும் கொண்டுள்ளது.
"ஆர்ச்சி பிறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, தந்தையர் தினத்தன்று என் கணவருக்காக நான் எழுதிய ஒரு கவிதையாக பெஞ்ச் தொடங்கியது" என்று மார்க்கல் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.