இளவரசர் ஹரியையும் மேகனையும் சீக்கிரம் நீதிமன்றத்துக்கு இழுப்பேன்: குடும்ப உறவினர் ஒருவரின் பரபரப்பு பேட்டி
பிரித்தானிய இளவரசர் ஹரியையும் அவரது மனைவி மேகனையும் சீக்கிரம் நீதிமன்றத்துக்கு இழுப்பேன் என்று கூறியுள்ளார் அவர்களது உறவினர் ஒருவர்.
அப்படி கூறியிருப்பவர், மேகனின் தந்தையான தாமஸ் மார்க்கல் (77). பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள தாமஸ், விரைவில் தன் மகள் மேகனையும், அவரது கணவர் ஹரியையும் நீதிமன்றத்துக்கு இழுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு காரணம்? மேகனுடைய திருமண நேரத்தில் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மகளின் திருமணத்தன்று, அவருக்கு பக்கத்தில் அவரது கையைப் பிடித்துக்கொண்டு தேவாலயத்தில் நடைபோடவேண்டிய தாமஸ், தனக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணத்துக்கு வர இயலாது என்று கூறிவிட, அவருக்கு பதில் ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ்தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து மேகனை கரம்பற்றி தேவாலயத்துக்கு அழைத்துவந்தார்.
ஓபரா பேட்டியின்போது, தன் தந்தை தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் ஒப்புரவாவது கடினம் என்றும் கூறியிருந்தார் மேகன்.
தந்தையும் மகளும் மென்மேலும் பிரச்சினைகளை வளர்த்தார்களேயொழிய, சமரசம் செய்துகொள்ள முயற்சி செய்யவேயில்லை. இந்நிலையில், தனது உடல் நிலை மோசமாகிக்கொண்டே வருவதால், தனது பேரப்பிள்ளைகளான ஆர்ச்சியையும், லிலிபெட்டையும் பார்க்காமலே போய்விடுவேனோ என தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார் தாமஸ்.
ஆகவே, தன் பேரப்பிள்ளைகளை பார்க்கும் உரிமையை தனக்கு வழங்கக் கோரி சீக்கிரத்தில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் புகாரளிக்க இருப்பதாக தாமஸ் தெரிவித்துள்ளார்.