ராணிக்காக கண்ணீர் சிந்திய மேகன் மார்க்கல்: மனைவியை சமாதானப்படுத்திய இளவரசர் ஹாரி
ராணி எலிசபெத்துக்காக கண்ணீர் சிந்தினார் சசெக்ஸின் டச்சஸ்.
கணவர் ஹாரியுடன் கை கோர்த்து சென்ற சசெக்ஸின் டச்சஸ் மேகன்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழாவில் சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் கண்ணீர் சிந்துவது தொடர்பான புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் நடைபெற்றது.
sky news
இதில் ராயல் குடும்பத்தினர் மற்றும் 100 நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் என மொத்தம் 2000 பேர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசு இறுதிச் சடங்கில் விண்ட்சருக்கான இறுதிப் பயணத்தின் போது சசெக்ஸின் டச்சஸ் மேகன் மனம் கசிந்து கண்ணீர் சிந்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
sky news
இதனைத் தொடர்ந்து சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கலை அவரது கணவர் மற்றும் இளவரசர் ஹாரி சமாதானப்படுத்தி கை கோர்த்து அழைத்துச் சென்றார்.
கூடுதல் செய்திகளுக்கு; தங்க கிரீடம் முதல் செங்கோல் வரை…ராணியின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன?
கடந்த 2019ம் ஆண்டு இளவரசர் ஹாரி தனது அரச பதவிகள் அனைத்திலிருந்தும் வெளியேறி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார், இதையடுத்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவர் மீதும் ராணி உட்பட ராயல் குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
sky news