ராஜ குடும்பத்தில் இருந்தால் இப்படியெல்லாம் உடை உடுத்த முடியுமா? அரைக்கால்சட்டையில் உலாவந்த மேகன்
ராஜ குடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்கு பணியமுடியாமல் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார் இளவரசர் ஹரியின் மனைவி மேகன். இருவரும் செய்த விதி மீறல்கள் ஏராளம்.
இந்நிலையில், ராஜ குடும்பத்தில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் உடை உடுத்த உடியுமா என, பார்ப்பவர்கள் மனதில் கேள்வி எழும் வகையிலான உடையில் உலாவந்துள்ளார் மேகன்.
அரைக்கால்சட்டையில் உலாவந்த மேகன்
ஜேர்மனியில் நடைபெறும் இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இளவரசர் ஹரியுடன் இணைந்துகொள்வதற்காக ஜேர்மனி வந்துள்ளார் மேகன்.
விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்குதல் முதலான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்றார் மேகன். பின்னர், கூடைப்பந்து போட்டி ஒன்றைக் காண ஹரியுடன் வந்த அவர் அணிந்திருந்த உடையைக் கண்டால் மன்னர் சார்லசெல்லாம் கொந்தளித்துவிடுவார்.
ஒரு முறை, இளவரசர் வில்லியம், கேட்டுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமான நிலையம் செல்லும்போது, கேட்டின் ஸ்கர்ட் காற்றில் பறக்க, அப்படியே முகத்தில் கடும் கோபம் காட்டியவர் மன்னர் சார்லஸ்.
இன்று மேகன் அணிந்திருந்த உடையைக் கண்டால், அதைவிட பத்துமடங்கு கோபமடைந்திருப்பார் மன்னர். ஆம், முழங்காலுக்கு மிக மேலே, தொடை தெரியும் வண்ணம் சின்ன அரைக்கால்சட்டை ஒன்றை அணிந்து வந்திருந்தார் மேகன்.
மேகன் மட்டும் ராஜ குடும்ப பொறுப்புகளில் இருப்பவராக இருந்திருந்தால், இப்படியெல்லாம் உடை அணிந்திருக்கமுடியுமா என்ற கேள்வியுடன் செய்திகள் வெளியிட்டுள்ளன பிரித்தானிய ஊடகங்கள்.