தென்னை ஓலையை சுற்றி வரையப்பட்ட கோடு: வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி
‘யாருப்பா அந்த பெயிண்டர்’, “பெயிண்ட் அடிக்குறது மட்டும் தான் எங்க வேலை, மட்டையை தூக்கிப்போடுவது அல்ல” என்ற தலைப்பில் மீம்ஸ்கள் வைரலாகின.
அவ்வாறு செய்தது ஏன்? என்ற உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
அதாவது, அங்குள்ள குழியை மூடுவதற்கு தென்னை ஓலை பயன்படுத்தப்பட்டதும் குழியை சுற்றிவளைத்து கோடு வரையப்பட்டதும் தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டியில் அமைந்துள்ள சாலையிலேயே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சாலையின் ஓரத்தில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்க சிறு தொட்டி கட்டப்பட்டிருந்ததும் தெரிந்தது.
இந்த சிறு தொட்டி சாலையோரம் இருப்பதால் இரவில் வாகனங்களில் வருபவர்களுக்கு தெரிய அந்த இடத்தில் கோடு வளைந்து வரையப்பட்டிருந்தது.
அப்போதும் சிறு சிறு விபத்துக்கள் நடந்ததால் பள்ளமான பகுதியில் தென்னை மட்டை வைத்துள்ளனர்.
ஆனால் இது எதுவும் தெரியாமல், அந்த வழியே சென்றவர் சாலையை புகைப்படம் எடுத்து வெளியிட வைரலாகியது குறிப்பிடத்தக்கது.