ஜேர்மனியில் சகோதரியை கொன்று சடலத்தை ரயிலில் கொண்டு சென்ற சகோதரர்கள்: அதிரவைத்த சம்பவம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சகோதரியை கொன்று ரயிலில் கொண்டு சென்ற சகோதரர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எனவும், தங்களது சகோதரியின் நடவடிக்கை தங்கள் சமூகத்திற்கு எதிரானதாக இருந்தமையால் கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
22 மற்றும் 25 வயதுடைய இரு சகோதரர்களையும் புதன்கிழமை பெர்லின் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜூலை மாதம் மத்தியில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 34 வயது பெண்மணி திடீரென்று மாயமானதாக கூறப்பட்டது.
இதனையடுத்து பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் மாயமான பெண்ணின் சகோதரர்கள் இருவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், அந்த இளைஞர்கள் இருவரும் பெட்டி ஒன்றுடன் ரயிலில் பயணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் பெர்லினில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள Donauwörth பகுதிக்கு புறப்பட்டு சென்றதும் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, வியாழக்கிழமை குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது. இளைஞர்கள் இருவரும் சகோதரியை கொலை செய்ததன் காரணம் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.