ஆடைகள் கிழிந்த நிலையில் நடந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 34 வயது பெண்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்
இந்தியாவை தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெண் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 34 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே உடன் வந்துள்ளார்.
அப்போது வெளியில் உணவு வாங்க சென்ற போது அப்பெண்ணை சிலர் காரில் கடத்தி சென்றனர். பின்னர் சில மணி நேரம் கழித்து ஆடைகள் கிழந்த நிலையில் உடல் முழுவதும் அழுக்கோடு வந்தார் அப்பெண்.
இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து விசாரித்த போது சிலர் தன்னை காரில் ஏற்றி சென்று பலாத்காரம் செய்ததாகவும் பின்னர் மருத்துவமனை அருகில் சேற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் கூறினார்.
பட்டப்பகலில் நடந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.