ஜேர்மனியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும்! அதிபரின் தலைமை உதவியாளர் எச்சரிக்கை
ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜேர்மன் அதிபரின் தலைமை உதவியாளர் Helge braun எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிந்து வந்த கொரோனா தொற்றுகள் ஜூலை மாத தொடக்க முதல் அதிகரித்து வருகிறது, இதற்கு குறிப்பாக டெல்படா மாறுபாடு பரவல் தான் காரணம் என கூறப்படுகிறது.
ஜேர்மனியில் மக்கள் தொகையில் பாதி பேர் தடுப்பூசி போட்டிருந்தாலும், வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவிதம் அதிகரிப்பதாக அதிபரின் தலைமை அதிகாரி Helge braun தெரிவித்தார்.
இதே விகிதத்தில் டெல்டா மாறுபாடு பரவினால், அதை தடுப்பூசி போடுவது அல்லது மற்ற கட்டுப்பாடுகள் மூலம் தடுக்கவிட்டால், எதிர்வரும் 9 வாரங்களில் 1 லட்சம் பேருக்கு 850 என்ற விகிதத்தில் பாதிப்பு ஏற்படும்.
24 மணிநேரத்தில் 1 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்படும், இதன் பாதிப்பு மிகவும் பயங்கரமாக இருக்கும் பலரை தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.
ஜேர்மனி மக்கள் தடுப்பூசி போட வேண்டும், தடுப்பூசி போட மக்களை ஜேர்மனி அரசு வற்புறுத்தாது என Helge braun தெரிவித்துள்ளார்.