அதிபர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு மாதம் மாதம் அரசிடமிருந்து பெரிய தொகையை பெறவிருக்கும் மெர்க்கல்! எவ்வளவு தெரியுமா?
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியை விட்டு வெளியேறிய பிறகு மாத மாதம் பெரிய தொகையை ஓய்வூதியமாக பொறுவார் என டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என அதிபர் மெர்க்கல் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
அதாவது, புதிய அரசு அமைந்த பிறகு மெர்க்கல் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வார். ஆனால் அவரது எதிர்கால திட்டங்களைப் பற்றி மெர்க்கல் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
எதிர்கால திட்டங்களைப் பற்றி சிந்திக்க நேரம் இடமும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு மெர்க்கல், ஒவ்வொரு மாதமும் சுமார் 15,000 யூரோக்கள் ஓய்வூதியமாக பொறுவார் என டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் 15 ஆண்டுகள் அதிபராக பணியாற்றிய மொர்க்கல், நாடாளுமன்ற சம்பளத்தில் 65% ஓய்வூதியத்திற்கு தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, அரசாங்க செலவில் உதவியாளர்கள், ஒரு செயலாளர் மற்றும் ஒரு ஓட்டுநரை பணியமர்த்த மெர்க்கலுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.