களமிறங்க தயாராகும் ஜேர்மன் இராணுவம்..! தடுப்பூசி போடாதவர்களுக்கு அதிபர் மெர்க்கல் முக்கிய அறிவுறுத்தல்
ஜேர்மனியில் தடுப்பூசி போடப்படாத மக்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கடந்த ஏழு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் மிகவும் உயர்ந்துள்ள நிலையில் மெர்க்கல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தனது வாராந்திர வீடியோ போட்காஸ்டில் பேசிய மெர்க்கல், கடினமான வாரங்கள் எதிர்வர உள்ளன, நான் மிகவும் கவலைப்படுவதை நீங்கள் காணலாம்.
இதுவரை தடுப்பூசி போடாத அனைவரும், தயவுசெய்து தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டபோது, ஒரே மாதிரியான விதிகளை கடைப்பிடித்த போது, அது நாட்டிற்கு எப்போதும் உதவியாக இருந்தது என மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியின் 16 மாநிலங்களின் கூட்டாட்சி அரசாங்க தலைவர்களும், மத்திய அரசும் அடுத்த வாரம் கூடி கடுமையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக கிறிஸ்துமஸிற்குள் ஜேர்மன் இராணுவம் 12,000 வீரர்களை அணிதிரட்ட தயாராகி வருகிறது என Spiegel செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதுவரை,சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக 630 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று Spiegel தெரிவித்துள்ளது.