புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெற்றால்... ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை
Election victory for AfD would do serious damage to the eastern German state, says Chancellor Friedrich Merz: எதிர்வரும் மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி வெற்றி பெறுமானால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஜேர்மன் சேன்ஸலரின் எச்சரிக்கை
இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அந்தத் தேர்தலில் வெற்றி பெறுமானால் அது அந்த மாகாணத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.

குறிப்பாக, Saxony-Anhalt மாகாணத்தின் பிரீமியர் AfD கட்சியைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அம்மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழில்களைத் துவக்க சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.
ஆகவே, தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளிடம் Saxony-Anhalt மாகாணம் சிக்குவதை தடுக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.
அதற்காக, தான் இந்த வாரம் Saxony-Anhalt மாகாணத்திற்கு நேரடியாகச் சென்று, யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாமலிருக்கும் அம்மாகாண வாக்காளர்களை AfD கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்கும் வகையில் அவர்களிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |