பார்சிலோனாவை விட்டு வெளியேறுகிறேன்! கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி: ரசிகர்களை கலங்க வைக்கும் காட்சி
பார்சிலோனா அணியைவிட்டு வெளியேறுவதாக செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க மெஸ்ஸி உறுதிப்படுத்தியது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று பார்சிலோனா கிளப் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இன்று பார்சிலோனா கிளப் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய மெஸ்ஸி, கண்ணீர் மல்க தான் பார்சிலோனா அணியை விட்டு வெளியேறுவதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், மெஸ்ஸி PSG அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
மெஸ்ஸியின் அறிவிப்பை தொடர்ந்து அரங்கத்திலிருந்து பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று மெஸ்ஸியை கை தட்டி பிரியா விடையளித்தனர்.
21 ஆண்டுகள் பார்சிலோனாவுக்காக விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, அந்த அணிக்காக இதுவரை 778 போட்டிகளில் விளையாடிஎ 672 கோல்கள் அடித்து உள்ளார், ஆறு முறை பலோன் டி'ஓர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— FC Barcelona (@FCBarcelona_es) August 8, 2021
செய்தியாளர் சந்திப்பில் மெஸ்ஸி கண்கலங்கியது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.