நீங்கள் இறந்தாலும் சமூக வலைத்தளத்தில் இயங்கலாம் - மெட்டாவின் சர்ச்சை திட்டம்
மெட்டா நிறுவனம் "Digital Stand-ins” என்ற தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மெட்டாவின் புதிய காப்புரிமை
மெட்டா நிறுவனம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளிட்ட பிரபல சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் ஆகும்.

இந்த சமூகவலைத்தளங்களை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பயனர்களை கவரும் வகையில் மெட்டா நிறுவனம் சமூகவலைத்தளங்களில் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதேவேளையில் நீங்கள் இறந்துவிட்டால் உங்கள் கணக்கு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் இயங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளது.
இத்தகைய "Digital Stand-ins” என்ற தொழில்நுட்பத்திற்கு மெட்டா நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது.
எப்படி செயல்படும்?
இதில், ஒரு AI சமூகவலைத்தளத்தில் உங்கள் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து உங்கள் குணாதிசியங்களை அப்படியே பதிவு செய்யும்.
நீங்கள் நீண்ட நாட்கள் சமூகவலைத்தளத்தை பயன்படுத்தாமல் இருந்தாலோ, அல்லது இறந்து விட்டாலோ, உங்களை போல் பதிவு போடுவது, நண்பர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, மற்றும் வரும் குறுஞ்செய்திகளுக்கு உங்களை போலவே பதிலளிப்பது என அனைத்தையும் இந்த ஏஐ செய்யும்.
இருப்பினும், இப்போதைக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என மெட்டா தெரிவித்துள்ளது.
ஏன் எதிர்ப்பு?
ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இறந்த நபர்களின் அடையாளத்தை வைத்து பணமோசடி செய்ய வாய்ப்புள்ளது.
மேலும், இறந்த ஒருவர் மெசேஜ் செய்வது போன்ற மாயை, அவரது குடும்பத்தினரை அந்த இழப்பில் இருந்து மீளவிடாமல் தடுக்கும் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |