வரலாற்றை மாற்றியமைக்குமா மும்பை இந்தியன்ஸ்? பஞ்சாப் அணியுடன் மோதல்
ஐபிஎல் 2025 குவாலிபையர் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று தனது வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குவாலிபையர் 2
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறிவிட்டது.
அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பதை முடிவு செய்யும் குவாலிபையர் 2 போட்டி இன்று நடைபெற உள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியே 3ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.
ரோஹித் ஷர்மா
ஆனால், விளையாடிய 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியையே தழுவியுள்ளது. இதன் காரணமாக இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 81 (50) ஓட்டங்கள் விளாசி மிரட்டினார். அவரைப் போலவே சூர்யகுமார், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்றோரும் நல்ல ஸ்ட்ரைக் ரைட் வைத்துள்ளனர்.
எனவே, துடுப்பாட்டத்தில் வலுவாக உள்ள மும்பை அணி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |