அமெரிக்காவை கலங்கவைத்த சம்பவம்: பலியான 3 மாணவர்களின் புகைப்படம் வெளியீடு
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த 3 மாணவர்கள் அணையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் Michigan மாகாணத்தில் உள்ள Detroit பகுதியில் அமைந்திருக்கும் Oxford உயர்நிலைப் பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
Picture: Facebook
மேலும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 15 வயது மிக்க சக மாணவர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களும் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அவர்களது புகைப்படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் ஹனா செயின்ட் ஜூலியானா (Hana St Juliana), 14 வயது, டேட் மைர் (Tate Myre), 16 வயது, மற்றும் மடிசின் பால்ட்வின் (Madisyn Baldwin), 17 வயது என அறியப்படுகிறார்கள்.
Picture: Facebook
சம்பவ இடத்திலே ஹனா மற்றும் மடிசின் இறந்துவிட்டதாகவும், டேட் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை தடுக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாக்வும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்த்துச்செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
Picture: Facebook
Picture: AFP/Getty Images
Picture: AP
Picture: AP