இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளர் குறித்து கருத்து தெரிவித்த அந்த அணியின் ஜாம்பவான்! அதற்கு அவர் தந்த பதிலடி
இலங்கை அணியின் கேப்டன் ஷனகாவுடனான பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் மைதானத்தில் வாக்குவாதம் செய்தது குறித்து அர்னால்டு கூறிய கருத்துக்கு ஆர்த்தர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியின்போது வெற்றி வாய்ப்பு இருந்தும் அதனை இலங்கை அணி நழுவவிட்டது. இதனால் விரக்தியடைந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் பெவிலியினில் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டார்.
அதன் பிறகு மைதானத்துக்குள் கோபமாக சென்ற அவர், கேப்டன் ஷனகாவுடன் வாக்குவாதம் செய்தார். அப்போதும் கடுமையான ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்ணால்டு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையிலான உரையாடல் பெவிலியன் உள்ளே நடக்க வேண்டுமே தவிர, மைதானத்தில் நடக்க கூடாது என தெரிவித்திருந்தார்.
இதற்கு மிக்கி ஆர்த்தர் காரசாரமான பதிலை அளித்திருக்கிறார். அதில், நாங்கள் வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாகவே சந்திக்கிறோம்.
இப்போது நிறைய கற்றும் வருகிறோம். நானும், ஷனகாவும் இந்த அணியை வளர்க்க பாடுபடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாங்கள் இருவருமே இப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததை முடிக்க முடியவில்லை. நீங்கள் பார்த்தது ஆரோக்கியமான உரையாடல்தான். அதில் தவறு ஏதும் இல்லை, அதை தவறாகவும் சித்தரிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.