இலங்கை கேப்டனிடம் நான் இதைத் தான் பேசினேன்! சண்டை குறித்து விளக்கம் அளித்த பயிற்சியாளர்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியால், இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், அந்தணி கேப்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஜெயிக்க வேண்டியை போட்டியை இலங்கை கோட்டை விட்டதால், அந்நாட்டு ரசிகர்கள் இலங்கை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையில் போட்டியின் போது, இலங்கை அணி கடைசி நேரத்தில் சொதப்பியதைக் கண்டு, அந்தணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
Micky Arthur's coaching career is over. This is Not because of India's victory. But Becoz of his bad behaviour at Stadium after lose. #INDvSL
— Pradeep Krishnan (@pradeep_reports) July 20, 2021
He argued with Captain at field pic.twitter.com/qmUFHidyla
அதுமட்டுமின்றி போட்டி முடிந்த பின்பு, இலங்கை அணியின் கேப்டனிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இதைக் கண்ட, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் ரசுல் அர்னால்டு, விமர்சித்தனர்.
இந்நிலையில், இது குறித்து மிக்கி ஆர்த்தர் கூறுகையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்று தெரியாமல் பேச வேண்டாம். போட்டி நடந்த பின்பு, நான் உடனடியாக சென்று அவரிடம் பேசினேன், அது ஆரோக்கியமான உரையாடல் தானே தவிர, நாங்கள் சண்டை போட்டுக் கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே தொடர் தோல்வியால் விரக்தியில் உள்ளோம் தயவு செய்து எங்களை விமர்சிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.