இந்தியாவின் தோல்விக்கு மீண்டும் அதே தான் காரணம்! வேதனையை கொட்டிய கே.எல்.ராகுல்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல் சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் இது என்பதால், அவருடைய கேப்டன் கரியர் தோல்வியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி தோல்வி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், நாங்கள் முதல் போட்டியில் என்ன தவறு செய்தோமோ, அதே தவறைத் தான் இந்த போட்டியில் செய்துள்ளோம்.
மிடில் ஆர்டரில் நல்ல ஒரு பார்டனர் ஷிப் அமையவில்லை. ஆனால், அது எப்படி அமைக்க வேண்டும் என்பதை தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் காட்டிவிட்டனர். இந்த தவறை திருத்தி, அடுத்த போட்டியில் நல்லதொரு ஆட்டத்தை கொடுப்போம் என்று கூறியுள்ளார்.