போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம்
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
போலியான திருமணம்
பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார்.
குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்துள்ள அந்த பாகிஸ்தானியருக்கு தொடர்புடைய ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் பிள்ளைகளும் உள்ளனர்.
நீதிமன்ற விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பொருட்டு, வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொள்ளும் குழுவில் நசீர் கலீல் என்பவரும் ஒருவர் என வெளிச்சத்திற்கு வந்தது.
ஸ்லோவாக்கிய பெண்ணுடன் சட்டத்திற்கு உட்பட்டு மீண்டும் திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு, 2019ல் நசீர் கலீல் பாகிஸ்தானிற்கு நாடுகடத்தப்பட்டார். மட்டுமின்றி, பிரித்தானியாவில் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கு குறித்த பெண்ணிற்கு காலவரையற்ற விடுப்பு வழங்கப்பட்ட பிறகு அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்தே, குடும்ப விசா மூலம் இங்கிலாந்து திரும்புவதற்கான முயற்சியில் அவரது சட்டத்தரணிகள் உள்விவகார அலுவலகத்திற்கு புதிய விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளனர்.
மட்டுமின்றி, பிரித்தானியாவில் வசிக்கும் பொருட்டு அந்த பாகிஸ்தானியர் சட்ட அமைப்பைப் பல வழிகளில் பயன்படுத்தியுள்ளார். நசீர் கலீலுக்கு விசா உத்தரவாதம் அளிப்பவர் அவரை விட இரண்டு தசாப்தங்கள் இளையவர், மேலும் பாடசாலை மாணவியாக இருந்தபோது அந்த நபரின் போலியான திருமணத்திற்கு இலக்கானவர்.
சட்டப்பூர்வ உரிமை
2012 ஆம் ஆண்டு ரோச்டேலில் உள்ள குடும்பத்தைப் பார்க்க கலீல் முதன்முதலில் பிரித்தானியாவிற்கு வந்தார். ஆரம்பத்தில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் தங்க அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட காலம் கடந்தும் அவர் பிரித்தானியாவில் தங்கியிருந்தார். மட்டுமின்றி, பாகிஸ்தானில் உள்ள தமது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், ஸ்லோவாக்கியா சிறுமிக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் திருமணமும் நடந்துள்ளது.
அதன் பின்னர் கலீல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள இயக்க சுதந்திரச் சட்டங்களை மேற்கோள் காட்டி, பிரித்தானியாவில் தங்குவதற்கு தனக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாக குறிப்பிட்டு ஸ்லோவாக்கியா இளம் பெண்ணுடன் நடந்த திருமண ஆவணங்களைப் பயன்படுத்த முயன்றார்.
மட்டுமின்றி, 2016ல் அவர் நாடுகடத்தப்படும் போது பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் வாதிட்டுள்ளார்.
தற்போது மீண்டும் குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் தற்போது உள்விவகார செயலாளர் ஷபானா மஹ்மூத் வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |