பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட நபர்
பிரித்தானியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
மூன்று முறை சிறை தண்டனை
ஈரானியரான அந்த நபர் கடந்த 2000 ஆண்டில் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளார். அவரது புகலிடக் கோரிக்கையானது ஆறு முறை பல்வேறு கட்டங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அந்த நபர் தற்போது ஈரானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்த 23 ஆண்டுகளில் மூன்று முறை அவர் சிறை தண்டனை அனுபவித்துள்ளதுடன், பிரித்தானியாவில் வைத்து திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
தற்போது அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இனி அவர் பிரித்தானியாவுக்கு திரும்ப முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்னும் சில காலம் அவர் பிரித்தானியாவில் தங்க நேர்ந்தால், ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கப்படும் நபர்களில், அவரும் இணைந்திருப்பார் என்றே கூறப்படுகிறது.
உள்விவகார அமைச்சக அதிகாரிகளுடன் அவர் பேச மறுத்த நிலையிலேயே முதல் முறையாக அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேல்முறையீடு செய்துள்ள அவர், மேலும் 8 மாதங்கள் தங்கியிருக்கும் அவகாசம் பெற்றார்.
ஆனால் 2002 ஜனவரி மாதம் அவரது இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அப்போது அவர் அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், 2005 நவம்பர் வரையில் தங்கும் அனுமதியும் பெற்றுள்ளார்.
நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்
ஆனால் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் அவர் அப்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அத்துடன் 6 மாத சிறை தண்டனையும் பெற்றார். 2009ல் போதை மருந்து வழக்கில் சிக்கிய அந்த நபர், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
இதுவே, அவரை நாடு கடத்தும் முடிவுக்கு அதிகாரிகளை தூண்டியுள்ளது. ஆனால் மீண்டும் அவர் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட அந்த நபருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க, குற்றவாளி என்பதால் அவரது மேல்முறையீடு மீண்டும் நிராகரிக்கப்பட்டது. 2018ல் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த நபரை கைவிட்டுள்ளார் அவரது மனைவி.
மட்டுமின்றி, விசாரணைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் தற்போது நிரந்தரமாக பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |