பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
பிரான்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் புலம்பெயர்வோர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில்...
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும், பிரான்சில் முகாமிடும் இடங்களில் Dunkirk என்னுமிடமும் ஒன்று.
இந்நிலையில், அங்கு 20 வயதுகளிலிருக்கும் புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளன. உண்மையில், அவரை நோக்கி சுமார் 20 குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவற்றில் ஏழு அவரது உடலில் பாய்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அவசர உதவிக்குழுவினர் அவரது உயிரைக் காக்க சிகிச்சையளித்தும், துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை சுட்டது ஆட்கடத்தல்காரர்கள் என நம்பப்படும் நிலையில், குற்றவாளிகளைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |