பிரித்தானியாவை நோக்கி படகில் பயணித்த புலம்பெயர்ந்தோருக்கு நடுக்கடலில் ஏற்பட்ட பரிதாபம்! வெளியான அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவை நோக்கி சென்ற புலம்பெயர்ந்தோரின் படகு எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை நோக்கி சட்டவிரோதமாக ஏராளமான புலம்பெயர்ந்தோர் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து பிரித்தானியா அரசு, பிரான்ஸ்க்கு பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று 31 புலம்பெயர்ந்தோர்கள் உள்ளடக்கிய சிறிய படகு ஒன்று பிரித்தானியாவை நோக்கி சென்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கோர சம்பவம் கலய்ஸ் கால்வாய்க்கு அருகில் உள்ள அனர்த்தம் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது மிகவும் மோசமான விபத்து என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த பகுதியில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசு ஒன்றிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் கடல் கொந்தளிப்பு அதிகமாகவே இருக்கும். நீரின் தன்மை அடர்த்தியாகவும் குளிர்மையாகவும் காணப்படும்.
இதனால் மிக மோசமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்றும் மட்டும் சுமார் 25 படகுகள் பிரித்தானியாவை அடைய முற்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.