ஸ்டார்மர் பிரதமராக அவர்கள் காத்திருக்கிறார்கள்... ரிஷி சுனக் விடுத்த கடும் எச்சரிக்கை
பிரித்தானியாவில் லேபர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் காத்திருப்பதாக ரிஷி சுனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டிப்பாக வெளியேற்றுவேன்
பிரித்தானியாவில் லேபர் கட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரான்சின் கலேஸ் பகுதியில் காத்திருப்பதாக கூறியுள்ள ரிஷி சுனக், இந்த விவகாரத்தில் தாம் போதுமான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், சட்டவிரோத புலம்பெயர் மக்களை கண்டிப்பாக வெளியேற்றுவேன் என்றும் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். அதற்கான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், லேபர் அரசாங்கம் அவர்கள் அனைவரையும் விடுவித்துவிடும் என்றார்.
ரிஷி சுனக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த ஸ்டார்மர், ருவாண்டா கொள்கை என்பதே விலையுயர்ந்த ஏமாற்று வேலை. சிறு படகு விவகாரம் என்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்று,
பிரித்தானியாவுக்குள் யார் வருகிறார்கள் என்பது பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ருவாண்டா கொள்கை என்பது ஏமாற்று வேலை என்றால், அந்த மக்களை எங்கே அனுப்ப திட்டம் என்றும் பொதுமக்கள் ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினர்.
மொத்தம் விடுவிக்கப்படுவார்கள்
ஆனால் ஸ்டார்மர் தெரிவிக்கையில், தற்போதே சட்டவிரோத புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாகவும், ரிஷி சுனக் மீண்டும் பிரதமராக நீடித்தால், இந்த எண்ணிக்கை ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக 100,000 என உயரும் வாய்ப்புகளே அதிகம் என்றார்.
லேபர் கட்சி அரசாங்கம் கண்டிப்பாக சிறு படகு புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்தும் என்றார். ருவாண்டா திட்டத்தை ரத்து செய்துவிட்டு சட்டவிரோத புலம்பெயர்தலை லேபர் அரசாங்கம் எவ்வாறு முறியடிக்கும் என்பதில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றே மக்கள் கருத்தாக உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 685,000 மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ரிஷி சுனக், நான் பிரதமராக நீடிப்பேன் என்றால், விமானம் புறப்பட தயாராகும், சட்டவிரோத புலம்பெயர் மக்கள் வெளியேற்றப்படுவதும் உறுதி என்றார்.
ஆனால் ஸ்டார்மர் பிரதமரானால், அவர்கள் மொத்தம் விடுவிக்கப்படுவார்கள், பிரித்தானியாவின் தெருக்களில் அவர்கள் நடமாடுவார்கள் என்றார். யார் தெரிவாக வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்களின் பொறுப்பு என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |