கொலைகாரர்கள், தீவிரவாதிகள், கொள்ளையர்கள்... பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் பகீர் பின்னணி
சிறிய படகுகளில் பிரித்தானியாவுக்குள் குடியேறும் நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களில் பலர் கொலைகாரர்கள், வன்புணர்வாளர்கள், தீவிரவாதிகள் என உள்ளூர் பத்திரிகை ஒன்று ரகசியமாக முன்னெடுத்த விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது.
வழக்கில் சிக்கியவர்கள்
ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் ஊடுருவும் ஆயிரக்கணக்கானவர்களில் பலர் போதை மருந்து கடத்தல்காரர்கள், குண்டர்கள், ஏமாற்று பேர்வழிகள், சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியவர்கள் என இதனால் தெரியவந்துள்ளது.
Credit: Andrew Styczynski
இவர்கள் பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் தங்குவதுடன், சட்டவிரோதமாக பணியாற்றி வருவாயும் ஈட்டுகின்றனர். ஆனால், படகுகளில் சட்டவிரோதமாக நுழையும் மக்களில் பெரும்பாலானோர் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்கள் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மனைவியை கொலை செய்த காரணத்தால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் வேட்டையாடும் என்பதால் மனித உரிமைகள் அடிப்படையில் அல்பேனியர் ஒருவரை நாட்டுக்கு அனுப்பாமல் உள்ளது பிரித்தானிய நிர்வாகம்.
அந்த நபர் தற்போது கார்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மட்டுமின்றி வரி செலுத்துவோரின் நிதியுதவியுடன் நீதிமன்றங்கள் மூலம் அரசு ஆதாயங்களை கோருவதுடன் புகலிடம் கோரியும் விண்ணப்பித்துள்ளார்.
ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்
இதனிடையே, சிறப்பு குழு ஒன்று குற்ற பின்னணி கொண்ட 1,000 புகலிடக் கோரிக்கையாளர்களை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாத நிலை உள்ளது என கூறும் அதிகாரிகள் தரப்பு, அந்த நபர்களை அவர்களின் நாடு தவறாக நடத்துவதாகவே குற்றஞ்சாட்டுகின்றனர்.
Credit: Andrew Styczynski
மட்டுமின்றி, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், பிரித்தானிய மக்களின் வரிப்பணத்தில் நீதிமன்றத்தை நாடி அடைக்கலம் பெறுகின்றனர். இந்த உண்மைகள் பிரித்தானிய பொதுமக்களுக்கு தெரியவந்தால், கண்டிப்பாக நாடு தழுவிய சீற்றத்தை உருவாக்கும் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கொடிய குற்றவாளிகள் வாழ்கின்றனர். இதில் பலர் மேலும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். சட்டவிரோதமாக வேலை பார்க்கின்றனர் மட்டுமின்றி அரசின் உதவிகளையும் பெறுகின்றனர் என்கிறார் அவர்.
ஒருமுறை அவர்கள் பிரித்தானியாவுக்குள் புகுந்துவிட்டால், அவர்களை வெளியேற்றுவது சிரமமே என்கிறார் அந்த சமூக ஆர்வலர்.