13 நாடுகளின் புலம்பெயர்ந்தோருக்கு தடை... கசிந்த நாடொன்றின் ரகசிய திட்டம்
எகிப்து, காஸா உட்பட 13 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் புலம்பெயர்ந்தோரை தடை செய்யும் லிபரல் கட்சியின் ரகசிய திட்டம் ஒன்று கசிந்துள்ளது.
மூன்று ஆண்டுகள் வரையில்
குறித்த திட்டமானது அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் சபை உறுப்பினரான சுசான் லேயின் கீழ் வரைவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதப்படும் பிராந்தியங்களில் இருந்து விசா கோரிக்கைகள் மூன்று ஆண்டுகள் வரையில் நிறுத்தி வைக்கப்படும்.
இந்த நிலையில், கட்சியின் மூத்த பிரமுகர்கள் இது திருத்தப்படக்கூடிய ஒரு வரைவு மட்டுமே என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், தற்போது இது புதிய எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லரின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது.
அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது,
இந்த நாடுகள் இரண்டும் சமீபத்திய மாதங்களில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த அல்லது சில சந்தர்ப்பங்களில் தடை செய்ய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

நாடுகடத்தலை எதிர்கொள்ள
ட்ரம்ப் நிர்வாகம் 75 நாடுகளுக்கான விசா நடைமுறையை இடைநிறுத்தியுள்ளது, அதே நேரத்தில் பிரித்தானிய அரசாங்கம் அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட நாடுகளைப் பாதிக்கும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், லிபரல் தலைவராக தனது புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோரின் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய கோரிக்கைகளை ஆங்கஸ் டெய்லர் அறிமுகப்படுத்தி வருவதன் பின்னணியை கசிந்துள்ள இந்த ஆவணங்கள் உறுதி செய்துள்ளது.
ஹமாஸ் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா மக்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்றே உறுதி செய்கின்றனர். மேலும், பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானாவோ, சோமாலியா மற்றும் ஏமன் போன்ற நீண்டகால பயங்கரவாத ஆக்கிரமிப்பு அல்லது கிளர்ச்சியை அனுபவிக்கும் பகுதிகளை இந்த திட்டம் குறிவைக்கிறது.

லிபரல் கட்சியின் வரைவுக் கொள்கையின் கீழ், தற்காலிக விசாக்களில் குடியேறுபவர்கள், லிபரல் கட்சியால் அவுஸ்திரேலிய மதிப்புகள் என்று வரையறுத்துள்ளதை மீறியுள்ளதாகக் கண்டறிந்தால், நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும்.
மட்டுமின்றி, அவுஸ்திரேலிய மதிப்புகளில் நம்பிக்கை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இனி அனுமதி இல்லை என்பதையும் ஆங்கஸ் டெய்லர் உறுதி செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |