வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்ததால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மாற்றம்
ஏராளமான வெளிநாட்டவர்கள் மக்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளதால் ஜேர்மனியின் மக்கள்தொகை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள ஜேர்மன் மக்கள்தொகை
2022ஆம் ஆண்டு, ஜேர்மனியின் மக்கள் தொகை இதுவரை இல்லாத வகையில் 84.3 மில்லியனாக உயர்ந்துள்ளதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்குக் காரணம் புலம்பெயர்தல்.
2021ஐ ஒப்பிடும்போது 2022இல் ஜேர்மனியின் மக்கள்தொகை 1.1 மில்லியன் உயர்ந்துள்ளது.
காரணம் புலம்பெயர்ந்தோர்
இப்படி ஜேர்மனியின் மக்கள்தொகை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதற்குக் காரணம் புலம்பெயர்தல் ஆகும். 1950இலிருந்து பார்க்கும்போது, 2022இல்தான் மிக அதிக அளவில் வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். 2021ஐ ஒப்பிடும்போது 2022இல் நிகர புலம்பெயர்தல் நான்கு மடங்கைவிட அதிகமாகும்.
முக்கிய விடயம் என்னவென்றால், நிகர புலம்பெயர்தல் இல்லையென்றால் 1972 முதல் ஜேர்மனியின் மக்கள்தொகை குறைந்திருக்கும். ஏனென்றால், ஜேர்மனியில் பிறப்பு எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இன்னொருபக்கம் பணியாளர் பற்றாக்குறை வேறு நிலவுவதால், தகுதியுடைய புலம்பெயர்ந்தோரை வரவேற்று அவர்களுக்குப் பணிவழங்க ஜேர்மன் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.