பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் தெரியாமல் 1 மில்லியன் மக்கள்: பிரதமர் விடுத்த கோரிக்கை
பிரித்தானியாவில் வாழும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர நடவடிக்கை தேவை
இது புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பு பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வெளிநாட்டில் பிறந்த பத்து சதவீத குடியிருப்பாளர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதில் திணறுவதாகவே தெரிய வந்துள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். 51.6 விழுக்காட்டினர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழி என்றும், 38.4 விழுக்காட்டினர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் 8 விழுக்காட்டினர், அதாவது 794,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் 1.4 விழுக்காட்டினர், சுமார் 137,876 பேர்கள் ஒரு வார்த்தைக் கூட ஆங்கிலம் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.
வெளியாகியுள்ள தரவுகள் தீவிர நடவடிக்கை தேவை என்ற கோரிக்கையை தூண்டியுள்ளது. மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ள கருத்தில், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றே கோரியுள்ளனர்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |