ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைக்கும் சந்தேகத்துக்குரிய ட்ரோன்களால் பரபரப்பு
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேல் பறக்கும் அடையாளம் தெரியாத ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மீதும் ட்ரோன்கள் பறப்பது அதிகரித்து வருகிறது.
நேற்று செய்தி ஒன்றை வெளியிட்ட ஜேர்மன் பத்திரிகையான Der Spiegel, அடையாளம் தெரியாத ட்ரோன்களின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமைந்துள்ள ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்களைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பதுகாப்பு அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் மீது, இரவிலும் கூட அடிக்கடி ட்ரோன்கள் பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் இடங்கள் மீது ட்ரோன்கள் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஜேர்மனி உக்ரைக்கு ஆதவளிப்பதைத் தொடர்ந்து இந்த ட்ரோன்கள் பறக்கும் பிரச்சினை அதிகரித்து வருவதால், அவை ரஷ்ய உளவுத்துறையால் இயக்கப்படுபவையாக இருக்கலாம் என ஜேர்மனியின் இராணுவ உளவு அமைப்பு சந்தேகிக்கிறது.