தடுப்பூசி பெற்றபின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த புலம்பெயர்ந்த பெண்: தொடரும் சோகம்
அமெரிக்காவில் தடுப்பூசி பெற்ற பின்னரும் கொரோனா தொற்றுக்கு ஆளான ஒரு பெண், தன் கால்களை இழந்துள்ளார். மின்னசோட்டாவைச் சேர்ந்த Jummai Nache, பிப்ரவரி 1ஆம் திகதி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
சில நாட்கள் கழித்து Jummaiக்கு நெஞ்சு வலி ஏற்படவே, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், உடலில் பல இடங்களில் அவருக்கு இரத்தக்கட்டிகள் உருவாகி பல உறுப்புகள் பாதிக்கப்பட்டன. Jummaiயின் நிலைமை மோசமடையவே, அவரது கால்கள் இரண்டையும் அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Jummaiயின் நிலைமைக்கு கொரோனா காரணமா என்பது தெரியாத நிலையில், அவரது கணவவர் Philip, தன் மனைவியின் பிரச்சினைக்கான காரணத்தை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கிடையில், Jummaiயிக்கு மற்றொரு துயர செய்தியை அளித்துள்ளார்கள் மருத்துவர்கள்.
ஆம், Jummaiயின் கைகளும் விரைவில் அகற்றப்பட உள்ளன என்ற செய்தி அறிந்து கலங்கிப்போயிருக்கின்றனர் தம்பதியர். Jummaiயும் Philipம், நைஜீரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.