மதம் மாற மறுத்த மைனர் காதலி; காதலனே நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கொடூரம்!
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுப்பு தெரிவித்த மைனர் பெண்ணை, காதலனே நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, மகாராஷ்டிராவில் மலெஜான் நகரத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார்.
அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மஜித் கான் என்ற அந்த இளைஞர், சிறுமியை தன் காதல் வலையில் விழ வைப்பதற்காக மோஹித் என பெயர் மாற்றிக்கொண்டு பழகி வந்துள்ளார்.
இருவரும் காதலித்துவந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் மஜித்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம், நான் உன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், நீ இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் மஜித். ஆனால் சிறுமி மதம் மாறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மஜித் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதைவிட அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், சிறுமியின் குடும்பத்தினர் சிறுமிக்கு நடந்த கொடுமையை பொலிஸில் தெரிவிக்கவில்லை. மாறாக, அவர்கள் சிறுமியை மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏப்ரல் மாதம் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு தீவிர வயிற்றுவலி ஏற்பட்டு குறை மாதத்தில் பிரசவம் ஆனது. ஆனால் குழந்தை இறந்தது.
அப்போது தான் சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை மருத்துவமனையில் இருந்த மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் இது குறித்து ஒரு இந்து அமைப்புக்கும் பொலிஸாருக்கும் அப்பெண் தகவல் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) மற்றும் மத்திய பிரதேச மத சுதந்திரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த வாரம், மஜித் கானை கைது செய்யப்பட்டார். பின்னர் செவ்வாய்கிழமை குழந்தையின் டி.என்.ஏ உடன் அவரது டி.என்.ஏ ஒத்துப்போகிறதா என்பதை அறிய அவர் உஜ்ஜைனுக்கு அழைத்துவரப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் இன்னும் சிக்கவில்லை.