சுவிஸை உலுக்கிய அழகியின் கொலை சம்பவம்: முதல் முறையாக வெளிப்பட்ட கணவரின் நோக்கம்
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அழகி கிறிஸ்டியானாவை கொலை செய்த சம்பவத்தில், அவரது கணவர் நோக்கம் முதல் முறையாக வெளிப்பட்டுள்ளது.
மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிப் போட்டியாளர்
முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிப் போட்டியாளரான கிறிஸ்டியானா ஜோக்சிமோவிக் (Kristina Joksimovic), கடந்த 2024ஆம் ஆண்டு தனது கணவரால் படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவரது உடலை கணவர் மார்க் ரீபன் பல பாகங்களாக வெட்டி, அவற்றை அரைத்து கூழ் போல் மாற்றியிருக்கிறார். இந்த கொடூர கோர சம்பவம் சுவிட்சர்லாந்தையும் தாண்டி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
2017யில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினர், அழகான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஏன் கொலை செய்தார்?
ரீபன் ஒரு முன்மாதிரியான கணவராகத் தோன்றியதாக அண்டை வீட்டாரும், அறிமுகமானவர்களும் கூறியிருக்கின்றனர்.
மேலும், அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள தந்தையாக இருந்ததுடன் தனது ஓய்வு நேரத்தில், ஒரு சாரணர் குழுவில் தன்னார்வத் தொண்டு செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.

அப்படியிருக்கையில் அவர் ஏன் தனது அன்பான மனைவியை கொலை செய்தார் என்ற கேள்வி நிலவியது.
திங்கட்கிழமை ரீபனின் விசாரணை தொடங்கவிருக்கும் நிலையில், கொலைக்கான நோக்கம் முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுவதாக, சுவிஸ் பத்திரிகையான Tages-Anzeiger செய்தி வெளியிட்டுள்ளது.
பேசல்லாந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, தம்பதியரின் பிரிவினை குறித்த வாக்குவாதத்தின்போது இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.

கருப்பையை அகற்றி
பிப்ரவரி 13ஆம் திகதியன்று, இருவரும் மதிய உணவின்போது வரவிருக்கும் பிரிவின் நிபந்தனைகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. ரீபன் விவாகரத்தை ஏற்க மறுத்ததாகவும், குழந்தைகளின் முழுநேரப் பாதுகாப்பைக் கோரியதாகவும், தனது மனைவிக்கு நிதி உதவியை மறுத்ததாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டது.
டெய்லி மெயில் பத்திரிகையால் பெறப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், பிப்ரவரியில் நடந்த அந்தத் துயரமான நாளில் என்ன நடந்தது என்பதன் முழு விவரங்களும் மனதை உலுக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்டினா கொல்லப்பட்ட பின் அவரது கருப்பையை ரீபன் கவனமாக அகற்றினார் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த செயல்களை, 'ஒரு மனநலக் கோளாறைக் குறிக்கக்கூடிய 'உடலை வேண்டுமென்றே சிதைத்தல் அல்லது சடங்கு ரீதியாக இழிவுபடுத்துதல்' என்று நிபுணர்கள் விவரித்துள்ளனர்.
மேலும், உடல் துண்டாக்கும் செயல்களை செய்துகொண்டிருந்தபோது, ரீபன் தனது செல்போனில் யூடியூப் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |