உக்ரைன் அழகியைப் பிரிந்த கணவர் மீண்டும் வந்தால்... வாழ்விழந்த பிரித்தானியப் பெண்ணின் பதில்!
உக்ரைனிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த அழகிய இளம்பெண் ஒருவருக்காக தன் மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர்.
ஆனால், அந்த உறவு நான்கு மாதங்கள்கூட நீடிக்கவில்லை.
உக்ரைனிலிருந்து அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர்.
ஆனால், அதனால் தங்கள் பெயர் பத்திரிகையிலெல்லாம் அடிபடும் அளவுக்கு ஒரு நிலை உருவாகும் என அவர்கள் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். அவருக்கு Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), அவரது மனைவியான லோர்னா (Lorna) மற்றும் தம்பதியருடைய இரண்டு பிள்ளைகள் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
Credit: Enterprise
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொள்ள, லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டோனியின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள் இருவரும். அப்போது இருவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட, கத்தியை எடுத்து சுவரில் ஓங்கி ஓங்கிக் குத்தினாராம் சோபியா. டோனி பொலிசாரை அழைக்க, இப்போது சோபியாவின் உடைமைகள் எல்லாம் குப்பை போடும் கவர்களில் வைக்கப்பட்டு வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளனவாம்.
Credit: NB PRESS LTD
இனி சோபியாவுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டாராம் டோனி.
இதற்கிடையில், டோனியும் சோபியாவும் பிரிந்த செய்தி அறிந்த டோனியின் மனைவியான லோர்னா, அந்த உறவு நீடிக்காது என்பது எனக்கு அப்போதே தெரியும், ஆனால், நான்கே மாதங்களில் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
Credit: NB PRESS LTD
ஆனால், மீண்டும் டோனிக்கு என் வாழ்வில் இடம் இல்லை என்று கூறியுள்ள லோர்னா, ஒரு மில்லியன் ஆண்டுகளானாலும் சரி, அவரை திரும்ப சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்.
ஆனால், மீண்டும் டோனிக்கு என் வாழ்வில் இடம் இல்லை என்று கூறியுள்ள லோர்னா, ஒரு மில்லியன் ஆண்டுகளானாலும் சரி, அவரை திரும்ப சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்று தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்.