லண்டனுக்கு பயணம் செய்த போது காணாமல் போன 15 வயது டீன் ஏஜ் பெண்ணின் நிலை என்ன? பொலிஸார் அதிகாரபூர்வ தகவல்
லண்டனுக்கு பயணம் செய்த 15 வயது டீன் ஏஜ் சிறுமி காணாமல் போன நிலையில் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரோசி சுவர்னா உமினோசி என்ற சிறுமி பிர்மிங்காம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், ரோசி, டென்பியில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் நண்பருடன் சென்றுள்ளார்.
லண்டனில் இருவரும் பிரிந்து சென்ற பின்னர் ரோசி மாயமாகியுள்ளார்.
அவர் பிர்மிங்காமுக்கு சென்றிருக்கலாம் என தகவல் கிடைத்தது, இந்த நிலையில் அங்கு தான் அவரை கண்டுபிடித்தோம் என கூறியுள்ளனர்.