லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட 11 வயது சிறுமி யார்? புகைப்படத்துடன் வெளியான முழு விபரம்
பிரித்தானியாவில் காணமல் போன சிறுமி ஒருவர் பாதுகாப்பாக மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள போல்டனில் இருந்து Fatuma Kadir என்ற 11 வயது சிறுமி வீட்டில் இருந்து காணமல் போயுள்ளார். கடைசியாக பெற்றோர் அவர் வீட்டில் இருப்பதை பார்த்துள்ளனர்.
கட்ந்த 22-ஆம் திகதி 7.25 மணி வரை சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் காணமல் போயுள்ளார்.
இதையடுத்து இது பொலிசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. துப்பறியும் தலைமை ஆய்வாளர் பால் ரோலின்சன் கூறுகையில், Fatuma Kadir பாதுகாப்பாகவும் நன்றாகவும் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம்.
அவள் இன்று லண்டனில் காணப்பட்டாள், எனவே அவளுடைய பெற்றோருடன் அவளை மீண்டும் ஒன்றிணைக்க நாங்கள் இப்போது வேலை செய்து வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்கள் பெற்றோரின் மோசமான நாட்களாக இருந்தன, எனவே Fatuma Kadir கண்டுபிடிப்பதற்காக உதவி செய்த அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி, இது விலைமதிப்பற்றது என்று கூறியுள்ளார்.
மேலும், சிறுமி எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தார்? எப்படி மீண்டும் வீட்டிற்கு வந்தார்? என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை.