2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் சொந்த வீட்டில் எலும்புக்கூடாக மீட்பு! திரைப்பட பாணியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்
கேரளாவில் 2 ஆண்டுகளாக காணாமல் போனதாக நம்பப்பட்ட நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் கொலை செய்து வீட்டில் புதைத்தது தற்போது தெரியவந்துள்ளது.
கேரளா கொல்லம் மாவட்டத்தில் எரூர் கிராமத்தை செர்ந்தவர் ஷாஜி பீட்டர் என்கிற கரடி ஷாஜி (35). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முனைவு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்திருந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் கானால் போனதாகவே எல்லோராலும் நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவர் பத்தனம்திட்டா மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று ஒரு கொலையை பற்றிய உண்மையை கூற வந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவர் குடி போதையில் இருந்ததால், முதலில் பொலிஸார் அவரை புறக்கணித்ததாக்க கூறப்படுகிறது.
அவர் மீண்டும் மீண்டும் தொல்லை செய்ததால் இறுதியாக அவர் கூறுவதை பொலிஸார் கவனித்துள்ளனர். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், எருர் கிராமத்தில் உள்ள ஷாஜியின் வீட்டுக்கு சென்று வீட்டை சோதனை செய்தனர்.
உறவினர் கொடுத்த தகவலின்படி, நேற்று (புதன்கிழமை) அந்த வீட்டின் தரையை தோண்டியபோது காணாமல் போனதாக நம்பப்பட்ட ஷாஜி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் திகதி ஓணம் பண்டிகையன்று, ஷாஜி அவரது தம்பி சஜின் என்பவரால் கொலை செய்யப்பட்டு, அவர்களது தாய் பொன்னம்மாவின் உதவியுடன் அவர்களது வீட்டிலேயே இரவோடு இரவாக பள்ளம் தோண்டி புதைத்து கான்க்ரீட் தரை போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொன்னம்மா மற்றும் சஜின் இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரித்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள், ஏராளமான திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஜி, எப்போதும் வீட்டிற்கு வந்து சண்டை போட்டுவந்ததாகவும், சம்பவம் நடந்த அன்று வழக்கம்போல ஷாஜி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சண்டைப்போட்டதாக கூறினார்.
அப்போது ஷாஜிக்கும் சகோதரர் சஜினுக்கும் இடையில் சண்டை முற்றியதால், அவரை தலையில் தாக்கியபோது அவர் உயிரிழந்ததாகவும் கூறினார். பின்னர் அவரது உடலை இருவரும் சேர்ந்து வீட்டிலேயே புதைத்ததையும் பொன்னம்மா மற்றும் சஜின் ஒப்புக்கொண்டனர்.
தாயுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்து, பிரபல மலையாள படத்தில் வருவைத்து போல வீட்டியிலேயே புதைத்துவிட்டு, 2 வருடங்களுக்கு மேலாக அவர் காணவில்லை என நாடகமாடிவந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.