திடீரென்று மாயமான 3 துள்ளிசை கலைஞர்கள்: பாழடைந்த குடியிருப்பில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் திடீரென்று மாயமான 3 பிரபல துள்ளிசை கலைஞர்கள், இரண்டு வாரங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூவரின் சடலங்களும் மீட்பு
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் ஜனவரி 21ம் திகதி இவர்களின் இசை நிகழ்ச்சி ரத்தான நிலையில், 28 வயதான Armani Kelly, 31 வயதான Dante Wicker மற்றும் Montoya Givens ஆகியோர் திடீரென்று மாயமாகினர்.
இந்த நிலையில் டெட்ராய்ட் பகுதியில் உள்ள பாழடைந்த குடியிருப்பு ஒன்றில் இடுபாடுகளுக்கு நடுவே வியாழக்கிழமை மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாடகர் கெல்லிக்கு சொந்தமான கார் ஒன்றை 15 வயது நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் காருக்குள் மோதல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, அந்த இளைஞரை கைது செய்த பின்னர் தான், மாயமான துள்ளிசை கலைஞர்களை மீட்க உதவியது என்பது தொடர்பிலும் உறுதியான தகவல் இல்லை.
@googlemaps
தாயார் அச்சம் தெரிவித்திருந்தார்
பாடகர்கள் மூவரை சடலமாக மீட்கப்பட்ட குடியிருப்பானது கைவிடப்பட்ட பகுதி என்றே கூறுகின்றனர். மேலும், கடந்த ஆண்டு ஆயுதம் ஏந்திய கொள்ளை சம்பவத்தில் சிக்கிய பாடகர் கெல்லி, சிறையில் தம்முடன் இருந்த நபரால் கொல்லப்படலாம் என அவரது தாயார் அச்சம் தெரிவித்திருந்தார்.
கெல்லியின் தாயாரும் வருங்கால மனைவியும் சேர்ந்தே பொலிசாரிடம் அவர் மாயமானதாக புகார் அளித்துள்ளனர். ஆனால் ஒருவாரத்திற்கு பின்னர் தான் கெல்லியுடன் மேலும் இரண்டு பாடகர்கள் மாயமானதாக பொலிசாருக்கு தெரியவந்தது.
@wxyz.com
இதனையடுத்தே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட கெல்லி சுமார் 8 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அங்கு வைத்து தான் அவருடன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள இருவரையும் கெல்லி சந்தித்துள்ளார்.
மூவரும் சேர்ந்தே ஜனவரி 21ம் திகதி இசை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். ஆனால், நிகழ்ச்சி முன்னெடுக்கப்படும் விடுதிக்கு சென்றார்களா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.